உன்னை யாருக்கும்
விட்டுகொடுக்க
மனம் வரவில்லை
காரணம்
நீ என் மீது
கொண்ட காதலினால்
அல்ல ,
நான் உன் மீது
கொண்ட நம்பிக்கையினால் ...
மெய்யாக்கிவிடு
என் நம்பிக்கையை !
பிரிந்து விடு ! பிரிந்து விடு
என்று நீ சொல்லும்போதெல்லாம்
வலிக்கவில்லை ,
வலிக்கிறது இன்று
உன் பிரிவினால் அல்ல,
நான் உன்னை புரிந்து
கொள்ளவில்லை என்று
நீ சொன்ன வார்த்தையால் ...