வெள்ளி, 12 ஏப்ரல், 2013

என் குரு வைரமுத்து அவர்களுக்கு !

என் திறமையை தேட
சொன்னர்கள்
நானோ என்னையே
என்னுள் தேடினேன் !
தேடலில் பலமுறை
தடங்களை தொலைத்ததுண்டு ...
இருப்பினும் இளமையின்
வேகம் என்னை விடவில்லை.
தேடலின் நீளம் அதிகமானது
கடைசியாக உன் பாதையில்
பயணிக்க எண்ணினேன்.
சிறு வயதில் நடக்க
கற்றுக்கொண்டேன்
விழுந்து  எழ
கற்றுக்கொடுத்துதது
அனுபவம் .....
தேடலும் தொடங்கியது
உன் பாதையும் அடைந்தேன் !
இன்றும் உன்னை காண
முடியவில்லை என்ற
ஏக்கத்துடன் திரும்பும்
 பல குரல்களுக்கு
மத்தியில் உன்னைகண்டே
தீருவேன் என்ற சில
குரல்களுடன்  நானும்
ஒருவள் ஆக வலம் வருகிறேன்,
உன் கைகளைப் பிடித்து
கவிதை நடை பயில
விரும்பும் பலரில்
ஒருவளாக ! :) :) :)


திங்கள், 1 ஏப்ரல், 2013

அண்ணியாக ஒரு தோழி !

உன்னிடம் பழகிய
நாட்கள் என்னவோ
குறைவுதான் ஆனால்
பரிமாறிக்கொண்ட
விஷயங்கள் அதிகம் ! !
அண்ணியாக வரப்போகும்
நீ இரட்டைச்சதம் அடித்து
விட்டாய் .....
ஒன்று என் அண்ணன்
மற்றொன்று நான் ! !
புகுந்த வீடு
புதிராக இருந்தாலும்
உனக்கான விடையாக
நான் இருப்பேன்
என்றும் தோழி
 என்ற பெயரில்  ! !.........