புதன், 21 மார்ச், 2012

நின் பிறப்பு

நீ பிறப்பெடுத்ததன்
காரணம்
அறிவாயோ மாட்டாயோ
நான் அறிவேன்
நிச்சயம் என்னை
கரம் பிடிக்கவே என்று...

செவ்வாய், 20 மார்ச், 2012

நிரந்தரம்

மனிதனாக பிறக்க என்ன பாவம் செய்தேனோ ?
நிலையில்லா வாழ்கையே நிரந்தரம் ஆகிப்போனது
நிலையில்லா வாழ்க்கையில் உறவுகள்
மட்டும் எப்படி நிரந்தரமாகும் ?
தெரிந்தும் கவலைப்படுவது ஏன் ?
காரணம் தான் இன்றளவும் விளங்கவில்லை,
புரியாத புதிரான என் வாழ்க்கையில் 
நீ மட்டும் நிரந்தரமாக வருவாயா ?
வருவாய் என்ற நம்பிக்கையுடன்
நான்  ! . . .